தோரண வாயில்

தோரணமலைக்கு வாருங்கள்
தமிழ்க் கடவுள் முருகன் என்றாலே அனைவருக்கும் அறுபடை வீடுதான் நினைவுக்கு வரும். இது முருகப்பெருமானின் புராண வரலாற்றில் முக்கிய சம்பவங்கள் நிழந்த இடங்கள் ஆறினை மட்டும் எடுத்து திருமுறுகாற்றுப்படை எடுத்தியம்பி இருக்கிறார். ஆனால் மேலும் பல கோவில்கள் முருகப்பெருமானின் வரலாறோடு தொடர்புடையதாக விளங்குகிறது. அது மட்டுமின்றி முருகப் பெருமானின் அருள் நிறைந்த தலங்கள் பல தமிழகத்தில் உள்ளன.
அந்த வகையில் தோரணமலை முருகன் கோவில் சித்தர்களோடு தொடர்புடையதாகவும், சித்தர்களின் அதிர்வலைககள் நிறைந்ததாகவும் விளங்குகிறது. அதோடு இந்த மலை மூலிகை வனமாகவும் காட்சி அளிக்கிறது. இந்த மலையில் சிறப்பு சில யுகங்கள் தெரியாமல் போயிருந்தது. தற்போது ஞானத்தின் மூலமாக இதன் சிறப்புகள் ஒவ்வொன்னறாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதாவது சித்தர்களின் பாடல்களை தேடிப்பிடித்து படித்து பொருள் உணர்ந்தபோது தோரணமலையின் பல சிறப்புகள் தெரியவந்தது.
முருகப்பெருமானின் அருளோடு மூலிகைகள் நிறைந்தும் சுனைகள் சூழ்ந்தும் காணப்படும் இம்மலையில் எப்போதும் சித்தர்களின் அதிர்வலைகள் இருந்து கொண்டே இருப்பதால் பக்தர்கள் இங்கு வந்து வேண்டியவை நிறைவேறுகிறது. இக்கோவில் தென்காசி&அம்பாசமுத்திரம் சாலையில் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.
இவ்வளவு சிறப்புமிக்க இத்தலத்தின் சிறப்புகளை பக்தர்களுக்கு அறிய வைப்பதே இந்த இணைய தளத்தின்நோக்கம். எங்களின் நோக்கம் அருள் நிறைந்ததாக இருக்கும். வாருங்கள் தோரணமலைக்கு...